Saturday, February 21, 2009

என் காதலி,

அன்று உறக்கத்தில் இருந்து மீள முடியவில்லை .. கண்ணில் இன்னும் மீதமிருந்த அவளின் கனவால் !

அந்த மழை அடித்து ஓய்ந்த இரவில் சாலையில் தனியே நான் நடந்தேன் .. அன்று அவள் பொழிந்த காதலால் குளிர் தெரியவில்லை .

ஆறாம் வகுப்பில் அவள் கண்ணை வடிவமைத்தேன் , எட்டாவதில் அவளின் முகத்தை , பத்தாவதில் நிறத்தை, கல்லூரியில் அவளின் அங்கங்களை .. ஆனால் என் வடிவமைப்புக்கு சற்றும் பொருந்தாத அவள் மேலே சட்டென வந்தது காதல் !

மனம் வீசும் இருட்டான காட்டுக்குள் இருப்பது போல் உணர்ந்தேன் ... அவளின் கூந்தல் என் முகத்தை மறைத்த போது ...

அன்று இரவு மழை , குளிர், இருட்டு ... என் அறையில் குளிருக்கு இதமாக அவளின் புடவையும், வெப்ப மூச்சும்....

என் உடலில் இரு மடங்கு பலம் வந்தது... அவளை அணைத்த போது ..

ஆறடி கூந்தலை விரும்பிய என்னை அரையடி கூந்தலால் அவள் அள்ளிய மாயத்தை
காதல் என்னும் வார்த்தையை தவிர வேறு என்ன சொல்ல? ... !!

அவள் என் தாடை அளவு கூட உயரம் இல்லை.. ஆனால் தாடையில் கை வைத்து அவளை சிந்திக்க வைத்து விட்டாள் ....









1 comment:

Unknown said...

he he...it doesnt fit for ur girl...onnu aala maathu illa poem huh maathu